×

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி 55 மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

செங்கல்பட்டு: தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 14ம் தேதி வரையில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரையில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, மதியம் 12, 12.10, 12.30, 12.50 இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள், வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.30, 9.56, 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கூடுவாஞ்சோி செல்லும் மின்சார ரயில்கள், தாம்பரத்தில் இருந்து காலை 10.30, 10.40, 11, 11.10, 11.30, 11.40, மதியம் 12.05, 12.35, 1, 1.30, இரவு 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து காலை 11, 11.30, மதியம் 12, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள், செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில், 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள்: பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே 15 சிறப்பு மின்சார ரயில்களும், பல்லாவரம் – சென்னை கடற்கரை இடையே 15 சிறப்பு மின்சார ரயில்களும், கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே 7 சிறப்பு மின்சார ரயில்களும், செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே 7 சிறப்பு மின்சார ரயில்கள் என மொத்தம் 44 சிறப்பு ரயில்கள் வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. குறிப்பாக, கூடுவாஞ்சேரியிலிருந்து காலை 10.45, 11.10, மதியம் 12, 12.50, 1.35, 1.55, இரவு 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து காலை 10, 10.30, 11, 11.45, மதியம் 12.30, 1, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரயில் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகிறது.

 

The post தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி 55 மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Southern Railway ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதால்...