×

செங்கல்பட்டு பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்: சப்-கலெக்டர் எச்சரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகினனர். சாலையை ஆக்கிரமித்து படுத்துக்கிடைக்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். ஒருசில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. செங்கல்பட்டு பகுதியில் வாகன ஓட்டிகளும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், செங்கல்பட்டு நகரில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்கும் விதமாக செங்கல்பட்டு சப்-கலெக்டர் நாராயண சர்மா தலைமையில் வருவாய்த்துறை, ஊராட்சித்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஆகியோருடனான சாலை பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், சப்-கலெக்டர் நாராயண சர்மா பேசுகையில், ‘செங்கல்பட்டு நகரம் காட்டாங்கொளத்தூர் ஊரக பகுதி, திருப்போரூர் ஊரக பகுதி, திருக்கழுக்குன்றம் ஊரக பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கும். போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும். மேலும், மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாடு வளர்ப்போர் தங்கள் இல்லங்களிலேயே பாதுகாப்பான முறையில் மாடுகளை வளர்த்துகொள்ளலாம். இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

 

The post செங்கல்பட்டு பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்: சப்-கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu GST ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுவீடாக...