×

கொத்தனாரை தாக்கி வழிப்பறி ஊர்காவல் படை வீரர் உட்பட 3 பேர் கைது

வேளச்சேரி: கோவிலம்பாக்கத்தை சேர்ந்த கொத்தனார் சுந்தர்ராஜ் (36), நேற்று முன்தினம் இரவு, தரமணி ரயில் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியே மதுபோதையில் வந்த 3 பேர், சுந்தர்ராஜை வழிமடக்கி பணம் பறித்துச் சென்றனர். இதுகுறித்து அவர் தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கண்ணகி நகரைச் சேர்ந்த ஊர்காவல் படை வீரர் ஜெயகுமார் (36) மற்றும் அவரது நண்பர்களான தரமணியை சேர்ந்த பாலு (24), விஜய் (24) ஆகியோர், பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை நேற்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

The post கொத்தனாரை தாக்கி வழிப்பறி ஊர்காவல் படை வீரர் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kothanar Sundarraj ,Kovilambakkam ,Taramani ,Sundarraj ,
× RELATED சென்னையில் புதிய படப்பிடிப்பு...