×

2 போலி மதுபான ஆலைகள் கண்டுபிடிப்பு; கல்பாக்கம் அருகே பரபரப்பு

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே 2 போலி மதுபான ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, ₹31 லட்சம் மதிப்பிலான மதுபானம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் மற்றும் நெய்குப்பி ஆகிய பகுதிகளில் போலி மதுபான ஆலை இயங்குவதாக செங்கல்பட்டு மாவட்ட நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நுண்ணறிவு பிரிவு எஸ்பி சுப்புலட்சுமி, சென்னை மண்டல மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்பி பெருமாள், நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் போலீசார் மேற்கண்ட பகுதிகளில் நேற்று சோதனை நடத்தினர்.அப்போது, பூந்தண்டலம் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவிலும், நெய் குப்பி பகுதியில் உள்ள  வீட்டில்  போலி மதுபானம் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து, பங்களா, வீட்டில் இருந்த காலி மதுபாட்டில்கள் மற்றும் மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மெஷின்கள், லேபிள், பாட்டில்கள் மற்றும் பாட்டில் மூடிகள், ஸ்டிக்கர், கலர் பவுடர் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ₹31 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. போலி மதுபானம் தயாரித்தது தொடர்பாக 2 பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கல்பாக்கம் அருகே 2 இடங்களில் போலி மதுபான ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post 2 போலி மதுபான ஆலைகள் கண்டுபிடிப்பு; கல்பாக்கம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kalpakkam ,Thirukkalukkunram ,Kalpakkam… ,Dinakaran ,
× RELATED கல்பாக்கம் அருகே பரபரப்பு மர்மமான...