×

நாற்றம் பிடித்த நகரங்கள் பெயரை வெளியிடுங்கள்: மேயர்களுக்கு மோடி வலியுறுத்தல்

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் அனைத்திந்திய மேயர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த 120 மேயர்கள் பங்கேற்றனர். இதை காணொலியில் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:  தூய்மையில் சிறந்து விளங்கும் நகரத்துக்கு மட்டும் விருதுகளை வழங்காமல், தூய்மை நகரத்துக்காக தீவிர முயற்சிகளை மேற்கொள்பவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்.தூய்மை பிரசாரத்தை புறக்கணித்து,  கண்களை மூடிக்கொண்டு அலட்சியமாக இருக்கும் நகரங்களின் பட்டியலை தயாரித்து, அதை மக்கள் பார்வைக்கு பகிரங்கமாக வெளியிட வேண்டும். தூய்மைப்படுத்தும் பணி ஆண்டுக்கு ஒரு முறை செய்யும் விஷயமாக இருக்கக் கூடாது.  தூய்மையை ஊக்கப்படுத்தும் வகையில், வார்டுகளுக்கு இடையே மாதந்தோறும் போட்டிகள் நடத்தி, மிக அழகானவற்றுக்கு  பரிசுகள் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.”பூடான் உயரிய விருது”இந்நிலையில், மோடி க்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் தி டிரக் கியால்போ’ அறிவிக்்கப்பட்டுள்ளது. இதற்காக பெருமை படுவதாக பூடான் பிரதமர் பிரதமர் லோடே ஷேரிங் தெரிவித்துள்ளார்….

The post நாற்றம் பிடித்த நகரங்கள் பெயரை வெளியிடுங்கள்: மேயர்களுக்கு மோடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Varanasi ,All-India Mayors Conference ,Varanasi, Uttar Pradesh ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி...