×

நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் மீட்புப் படையினர் முகாம்


நீலகிரி: கனமழை பெய்து வரும் நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்கள் முகாமிட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தை புரட்டிப்போடும் அளவுக்கு கனமழை பெய்து வருகிறது.மீட்புப் பணிகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். உதகை, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் தலா 10 பேர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

The post நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் மீட்புப் படையினர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Disaster Response Force Camp ,Nilgiri District ,Nilgiris ,Tamil Nadu Disaster Response Force ,Nilgiris district ,Utkai ,Manjur ,Dewala ,Disaster Rescuers Camp ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு பேருந்து கடத்தல்