×

ஆழியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு

பொள்ளாச்சி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பொள்ளாச்சி ஆழியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 7 மணி நிலவரப்படி, 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 95.80 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,356 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஆழியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு appeared first on Dinakaran.

Tags : Azhiyar dam ,Pollachi ,Pollachi Azhiyar Dam ,Western Ghats ,
× RELATED வரத்து அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு