×

ஜாம்பஜாரில் பரபரப்பு பள்ளி மாணவன் ஓட்டிய கார் மோதி 10 பேர் படுகாயம்: 15 வாகனங்கள் சேதம்

சென்னை: திருவல்லிக்கேணி பாரதி சாலையில் இருந்து ஜாம்பஜார் நோக்கில் சொகுசு கார் ஒன்று நேற்று மாலை சென்றது. வழக்கம் போல் ஜாம்பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அப்போது திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் முன்னால் சென்ற ஆட்டோ, பைக் என 15 வாகங்கள் சேதமடைந்தது. 10 பேர் படுகாயமடைந்தனர். உடனே பொதுமக்கள் காரை ஓட்டிய வாலிபர் மற்றும் உடன் இருந்த நபரை பிடித்து சரமாரியாக உதைத்தனர். இதனால் ஜாம்பஜார் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த ஜாம்பஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் காயமடைந்த 10 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கார் ஓட்டி வந்த 2 பேரை, மீட்டு விசாரணை நடத்தினர். அதில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் தனது நண்பருடன் கார் ஓட்டி வந்தது ெதரியவந்தது. இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய 2 சிறுவர்களையும் அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், கார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஜாம்பஜாரில் பரபரப்பு பள்ளி மாணவன் ஓட்டிய கார் மோதி 10 பேர் படுகாயம்: 15 வாகனங்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Jambazar ,CHENNAI ,Tiruvallikeni Bharati Road ,Dinakaran ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...