×

3வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாப பலி

ஆவடி: பட்டாபிராம் பகுதியில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி அடுத்த பட்டாபிராம் டைடல் ஐடி பார்க் கட்டிடத்தில் திண்டிவனத்தைச் சேர்ந்த வளர்மதி (50) என்பவர் கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று மாலை 3வது மாடியில் சுவரில் உள்ள துளையை சிமென்ட் கலவையால் அடைத்துகொண்டு இருந்துள்ளார். அப்போது எந்தவித பாதுகாப்பு வசதியும் இல்லாமல், லிப்ட்டுக்காக போடப்பட்டு இருந்த கதவு திடீரென திறந்து கொண்டதால் 3வது மாடியில் இருந்து வளர்மதி கீழே தவறி விழுந்துள்ளார்.

இதில் மயக்கமடைந்த நிலையில் இருந்த அவரை உடன் பணிபுரிந்த ஊழியர்கள் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Pattabiram ,Varamathi ,Dindivan ,Pattabram Tidal IT Park ,Avadi ,Dinakaran ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்களின்...