×

ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து, திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயிலுக்கு வஸ்திர மரியாதை: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து வஸ்திரங்கள், குடைகள், மலர் வகைகள், பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் இன்று (16.07.2024) ஆந்திர மாநிலம், திருப்பதி, அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயிலுக்கு வழங்கி வஸ்திர மரியாதை செய்யப்பட்ட நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

முகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது, அவர்களிடம் நம்பெருமான் விக்ரகங்கள் சிக்காமல் இருப்பதற்காக, திருப்பதி மலையில் வைத்து சுமார் 50 ஆண்டுகள் விக்ரகங்கள் பாதுகாக்கப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து ஆடி மாதம் 1 ந் தேதி ஆந்திர மாநிலம், திருப்பதி, அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயிலுக்கு வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (16.07.2024) ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரங்கள், குடைகள், மலர் வகைகள், பழங்கள், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் ஆந்திர மாநிலம், திருப்பதி, அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயிலுக்கு வழங்கி வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்தரமோகன், 11 இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் சி.மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து, திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயிலுக்கு வஸ்திர மரியாதை: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Srirangam ,Arulmigu Aranganatha Swami Temple ,Tirupathi Venkadasalapathi Temple ,Minister ,Sekarbhabu ,Tiruchirappalli District ,Mangala ,Andhra State ,Tirupathi ,Arulmigu Venkatasalapathi ,Vestra ,Tirupathi Venkadasalapathi ,Temple ,Sekarbabu ,
× RELATED ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று இரவு உறியடி...