×

ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாள் அனுமதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.

இதன்படி ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் ஜூலை 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை 4 நாட்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாள் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chaturagiri temple ,Adi month ,Virudhunagar ,Chathuragiri Sundaramakalingam temple ,Western Ghats ,Vathirairipu ,Virudhunagar district ,Amavasi ,
× RELATED சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி