×

காவிரி விவகாரம் தொடர்பாக துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. காவிரி விவகாரம் தொடர்பான சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. கர்நாடக அணைகளிலிருந்து காவிரி நீர் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுக பங்கேற்கிறது.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு அறிவித்துள்ளதையொட்டி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும் செயல்படுத்த, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி 2018ம் ஆண்டு ஜூன் முதல் இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.

நேற்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டின் மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த சூழலில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. காவிரி நீரை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை இன்று (16.07.2024) காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் கூட்டிட உத்தரவிட்டுள்ளேன். காவிரி விவகாரம் தொடர்பான சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

The post காவிரி விவகாரம் தொடர்பாக துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kaviri ,Duraimurugan ,Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Caviri ,K. Stalin ,Kaviri Affair ,Chennai Chief Secretariat ,MLA ,Dinakaran ,
× RELATED காவல்துறை குறித்து அவதூறாக...