- எம்.கே.
- மஹெஸ்
- பள்ளிக் கல்வித் திணைக்களத்தின் அமைச்சர்
- சென்னை
- எம். கே பள்ளி கல்வி
- அமைச்சர்
- லவ் மஹெஸ்
- ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- அமைச்சர்
- துறை
- பள்ளி கல்வி
- தின மலர்
சென்னை: மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த திட்டமான “முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை” இன்று ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுப் படுத்தியுள்ளார்கள். இதன் மூலம் புதிதாக 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.23 இலட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த திட்டமான “முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை” இன்று ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுப் படுத்தியுள்ளார்கள்.
இதன் மூலம் புதிதாக 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.23… pic.twitter.com/Gfa87tx3Zr
— Anbil Mahesh (@Anbil_Mahesh) July 15, 2024
ஒட்டுமொத்தமாக 34,987 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைகிறார்கள். 22 லட்சம் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கி, அவர்களின் பெற்றோர்களுக்கு மன நிறைவை தந்துள்ள தமிழ்நாட்டின் தாயுமானவர் மு.க.ஸ்டாலின் அவர்களை வணங்குகின்றோம். இத்திட்டம் இந்திய ஒன்றியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் திட்டமாக அமைந்துள்ளது. சட்டமன்றத்தில் தெரிவித்ததை இங்கே மீண்டும் பதிவு செய்கின்றேன்.
இந்த மகத்தான திட்டத்திற்கு “மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்” எனும் பெயர் சூட்ட வேண்டும். கடல் தாண்டி உலகம் முழுக்க இத்திட்டம் பரவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்’ என்று பெயர் சூட்ட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தல்! appeared first on Dinakaran.