×

5 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்: 19ம் தேதி சென்னை திரும்புகிறார்

சென்னை: ஐந்து நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் மீண்டும் 19ம் தேதி சென்னை திரும்புகிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, நேற்று காலை 11.25 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநருடன் அவரது செயலாளர், பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் ஆகியோரும் சென்றுள்ளனர்.

ஆளுநர் ரவி 5 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு மீண்டும் 19ம் தேதி மாலை 4:20 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை திரும்புகிறார். ஆளுநரின் இந்த பயணம் அவருடைய தனிப்பட்ட முறையிலான பயணம் என்று கூறப்படுகிறது.  ஆனாலும் டெல்லியில் தங்கி இருக்கும் 5 நாட்களில் ஒன்றிய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை ஆளுநர் சந்தித்துப் பேச வாய்ப்பிருப்பதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post 5 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்: 19ம் தேதி சென்னை திரும்புகிறார் appeared first on Dinakaran.

Tags : Governor RN Ravi ,Delhi ,Chennai ,Tamil Nadu ,Governor R.N. Ravi ,Vistara Airlines ,
× RELATED மாநில கல்வி நிலை குறித்து ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு