×

தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 12 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், வரும் 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 17 முதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி , மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வரும் 16-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழககடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 12 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்! appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,Chennai ,Meteorological Centre ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvallur ,Viluppuram ,Vellore ,Ranipetta ,Tiruvannamalai ,Theni ,Tenkasi ,Nella ,Kumari ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில்...