×

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி: 3 ஆண்டு ஆட்சியை ஏற்று மக்கள் வெற்றியைக் கொடுத்துள்ளனர்.! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி இந்தியாவிலேயே தமிழகத்தில் நூற்றுக்கு நூறு என்ற அளவில் ஒரு மாபெரும் வெற்றியை பெற்றது. தேர்தல் முடிந்து ஒரு சில நாட்களுக்குள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சிகளும் வராத சவால்கள் எல்லாம் ஏற்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு மிக அருகில் அப்பகுதி ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சியில் சோக சம்பவம் நடைபெற்றது. அது மிகப்பெரிய பூதாகரமாக இந்தியாவில் இருக்கக்கூடிய மத்திய அமைச்சர்கள் முதல் உள்ளூரில் இருக்கக்கூடிய பாஜக தலைவர்கள் வரை ஆட்டம் போட்டு மிகப்பெரிய நாடகத்தை நடத்தினர். இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் 40க்கு 40 என்று வெற்றி எப்படியாவது குலைத்து விட வேண்டும் என்று செயல்பட்டார்கள்.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் யாரும் எதிர்பாராமல் நடந்த ஒரு கொலைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது. இந்த மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சி மூன்று ஆண்டுகால ஆட்சி நடத்திய முறையை மக்கள் ஏற்றுக்கொண்டு, யார் என்ன சொன்னாலும் யார் எதிர்த்தாலும், தூற்றினாலும், நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று நிரூபித்து காட்டியுள்ளனர். இந்த மகத்தான வெற்றியை தேடி கொடுத்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு திமுக வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறது என்றார்.

The post விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி: 3 ஆண்டு ஆட்சியை ஏற்று மக்கள் வெற்றியைக் கொடுத்துள்ளனர்.! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Vikrawandi ,Dimuka Organization ,R. S. ,Bharati ,Chennai ,Anna Vidawalayat ,R. S. Bharati ,Tamil ,Nadu ,Chief Minister ,People's Elections ,MLA ,India Alliance ,Stalin ,India ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள்...