×

சென்னை – மஸ்கட் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி

சென்னை: ஓமன் தலைநகர் மஸ்கட்-சென்னை இடையே வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் 3 புதிய நேரடி விமான சேவை நேற்று தொடங்கியது. ஓமன் நாட்டில் உள்ள சலாம் ஏர் விமான நிறுவனம், மஸ்கட்- சென்னை- மஸ்கட் இடையே புதிய நேரடி விமான சேவையை நேற்று முதல் தொடங்கி உள்ளது. வாரத்தில் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் இயக்கப்படும் இந்த சலாம் ஏர் விமானம் மஸ்கட்டில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு மஸ்கட் புறப்பட்டு செல்கிறது.

இந்த விமானத்தின் பயண நேரம் 3 மணி 46 நிமிடங்கள். இப்போது வாரத்தில் இரண்டு தினங்கள் இயக்கப்படும் இந்த விமான சேவைகள், பயணிகளின் வரவேற்பை பொறுத்து, தினமும் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து மஸ்கட்டிற்கு கூடுதலாக விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் வாரத்தில் இரண்டு தினங்கள் இயக்கப்படும் இந்த சலாம் ஏர் விமான சேவைகள், தினசரி சேவைகளாக மாற்றப்பட வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.

The post சென்னை – மஸ்கட் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Muscat ,Oman ,Salam Air ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!