×

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பெண் செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்

சென்னை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ் நர்சிங்கில் தேர்ச்சி பெற்று 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். நேர்காணல் வரும் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை கொச்சியில் நடைபெற உள்ளது. விவரங்கள் www.omcmanpower.tn.gov.in- வலைத்தளத்தில் உள்ளது. ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறியலாம் (95662 39685, 63791 79200) (044-22505886 / 044-22502267). www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளத்தில் தவறாமல் பதிவுசெய்து, ovemclmohsa2021@gmail.com என்ற நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்லூரி சான்றிதழ், பாஸ்போட், அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை அனுப்ப வேண்டும். படிப்பு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும், இந்த பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பெண் செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Saudi Arabian ,CHENNAI ,Foreign Employment Agency ,Agency ,Dinakaran ,
× RELATED சவுதி அரேபியாவில் மருத்துவ பணிக்கு...