×

புகார் அளித்த சேலம் பெரியார் பல்கலை. ஊழியர்களுக்கு மிரட்டல்?

சென்னை: முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்த ஒப்பந்த ஊழியர்களை சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மிரட்டுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களை மிரட்டும் வகையில் விசாரணைக்கு ஆஜராக பல்கலைக்கழக நிர்வாகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஜூலை 15-ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என பல்கலை. நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தீனதயாள் உபாத்யாய் திட்டத்தின் கீழ் பணியாற்றிய பல்வேறு நிலையிலான ஒப்பந்த அலுவலர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

The post புகார் அளித்த சேலம் பெரியார் பல்கலை. ஊழியர்களுக்கு மிரட்டல்? appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Chennai ,Chief Minister ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது குற்றவியல் வழக்கு