×

உதகை அருகே யானைகள் நடமாட்டத்தால் அச்சம்: ரேஷன் கடையில் பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானையை அடர் வனத்தில் விரட்டக் கோரிக்கை

உதகை: உதகை அருகே நியாய விலை கடையின் ஜன்னலை உடைத்து காட்டுயானைகள் உணவு பொருட்களை சேதப்படுத்தி இருப்பதால் கிராமமக்கள் பீதியடைந்துள்ளனர். உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்காரா வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

இதனால் அந்த பகுதியில் காட்டுயானை போன்ற வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை புகுந்த காட்டுயானை ஒன்று அங்குள்ள நியாயவிலை கடையின் ஜன்னலை உடைத்து பருப்பு சர்க்கரை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு பீதி அடைந்த கிராமமக்கள் நீண்ட போராட்டத்திற்கு பின் அதை விரட்டி அடித்தனர்.

The post உதகை அருகே யானைகள் நடமாட்டத்தால் அச்சம்: ரேஷன் கடையில் பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானையை அடர் வனத்தில் விரட்டக் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Utagai ,Singara forest ,Mudumalai Tiger Reserve ,Dinakaran ,
× RELATED சீகூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் 2 பெண் செந்நாய்கள் உயிரிழப்பு