×

பைக் மீது லாரி மோதி மகள் கண் முன்னே தாய் தலை நசுங்கி பரிதாப பலி: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்


ஸ்ரீபெரும்புதூர்: வண்டலூர், மண்ணிவாக்கம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் ராணி (55). இவரது மகள் சினேகா (22). இருவரும், நேற்று முன்தினம் காலை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காந்தூர் பகுதியில் நடைபெற இருந்த உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பைக்கில் சுங்குவார்சத்திரம் – மதுரமங்கலம் சாலை வழியாக காந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, மகள் சினேகா பைக் ஓட்டுச்செல்ல, ராணி பின்னால் அமர்ந்துக்கொண்டு சோகண்டி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது.

இதில், பைக்கில் இருந்து கீழே விழுந்த ராணி மீது லாரி ஏறி இறங்கியதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனை கண்ட டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சுங்குவார்சத்திரம் போலீசார், ராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது லாரி மோதி மகள் கண் முன்னே தாய் தலை நசுங்கி பரிதாப பலி: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Rani ,MGR Street, Vandalur, Mannivakkam ,Sneha ,Chungwarchatram – ,Maduramangalam ,Kanthur ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மழைநீர்...