×

100 நாள் வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் திடீர் போராட்டம்

செய்யூர்: செய்யூர் வட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூனாம்பேடு, அகரம், கொளத்தூர், போந்தூர், முகுந்தகிரி, பெரிய களக்காடி மேல்மருவத்தூர், பொறையூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வேலையை நிதியில்லை எனக்கூறி, வேலை வழங்க மறுக்கும் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட குழு உறுப்பினர் கோவிந்தசாமி தலைமையில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு, 100 நாள் வேலையை மீண்டும் வழங்கக்கோரி தொடர் முழக்க போாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் உடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், 2 நாட்களுக்குள் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

The post 100 நாள் வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Seyyur ,Sunambedu ,Akaram ,Kolathur ,Bondur ,Mukuntagiri ,Periya Kalakadi Melmaruvathur ,Boraiyur ,Chittamur ,Dinakaran ,
× RELATED கூவத்தூர் – பவுஞ்சூர் சாலையில் வாகன...