×

பிரதான உந்து குழாயில் இணைப்பு பணி 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: பிரதான உந்து குழாயில் இணைப்பு பணி நடைபெற உள்ளதால், 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் இணைப்புப் பணிகள் (புரசைவாக்கம் நெடுஞ்சாலையில்) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை(12ம்தேதி) காலை 10 மணி முதல் 13ம்தேதி மாலை 6 மணி வரை (36 மணி நேரம்) மண்டலம்-5 (இராயபுரம்), மண்டலம்-6 (திரு.வி.க நகர்), மண்டலம்-8 (அண்ணா நகர்) மண்டலம்-9 (தேனாம்பேட்டை) மற்றும் மண்டலம்-10 (கோடம்பாக்கம்) ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (டயல் பார் வாட்டர்) மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post பிரதான உந்து குழாயில் இணைப்பு பணி 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Water Board ,CHENNAI ,Chennai Water Supply Board ,Chennai Drinking Water Board ,
× RELATED 2024-25 இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர்...