×

மனநல காப்பக விவகாரம்: 10 பேருக்கு காவல்துறை சம்மன்

உதகை: நீலகிரி அருகே குந்தலாடியில் மனநல காப்பகத்தில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்ததை அதிகாரிகளுக்கு தெரியாமல் புதைத்த விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காப்பக உரிமையாளர் அகஸ்டியன், அவரது மனைவி உட்பட 10 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளாக அனுமதியின்றி செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தில் இருந்து 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

The post மனநல காப்பக விவகாரம்: 10 பேருக்கு காவல்துறை சம்மன் appeared first on Dinakaran.

Tags : Summon ,Kundaladi ,Nilgiri ,Agustín ,
× RELATED கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், அச்சிறுமியின் தாய்மாமன் கைது