×

தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு: மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில்; தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி! தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற ‘கட்டிட நிறைவு சான்றிதழ்’ தேவை இல்லை.

* 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள்.

* 750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடு

* 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்கள்

* அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள்

இன்றே விண்ணப்பியுங்கள்!!
https://tangedco.org/en/tangedco/online-services/onlinesernew/

The post தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு: மின்சார வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Electricity Board ,Chennai ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED விவசாய மின்இணைப்பை வீட்டுக்கு...