×

சமூக வலைதளத்தில் பஞ்.தலைவர் குறித்து அவதூறாக பதிவு

தர்மபுரி, ஜூலை 11: தர்மபுரி மாவட்டம், அரூர் கோட்டப்பட்டி வேடக்கட்டுமடுவு பகுதியைச் சேர்ந்தவர் முத்து மனைவி ராணி(40). இவர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் கடந்த 3ம் தேதி, அப்பகுதியில் உள்ள மயானத்தில் சிமெண்ட் சாலை அமைக்க சென்றார். அப்போது, அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஆக்கிரமிப்பை அகற்றினார். இதனால் ஆக்கிரமிப்பு செய்தவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ராணி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவு செய்தனர். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், ராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சமூக வலைதளத்தில் பஞ்.தலைவர் குறித்து அவதூறாக பதிவு appeared first on Dinakaran.

Tags : Panj ,Dharmapuri ,Muthu ,Rani ,Arur Kottapatti Vedakattumadhu ,Dharmapuri district ,panchayat ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் நகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க பஞ்.தலைவர்கள் எதிர்ப்பு