×

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: மருமகன், மாமனார், மாமியார் மீது புகார்; வரதட்சணை கொடுமையா ஆர்டிஓ விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் சீனிவாசா தெருவில் வசித்து வருபவர் சண்முகம். இவரது மனைவி வெங்கட்டம்மாள் (46). இவர்களது மகள் சரண்யா (26). இவரை கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் நாகராஜுக்கு கடந்த 2016 ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு சக்திவேல் என்ற குழந்தை உள்ளார். திருமணத்தின் போது மோட்டார் சைக்கிள், 20 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பாத்திரங்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால் இந்த நகைகளை மருமகன் நாகராஜ் விற்று அழித்து விட்டதாகவும் தினமும் குடித்துவிட்டு வந்து சரண்யாவை கொடுமை படுத்தியதாகவும் அவருடன் சேர்ந்து அவரது தந்தை கோவிந்தசாமி மற்றும் அவரது தாயார் முனியம்மாள் ஆகியோரும் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரண்யா நேற்றுமுன்தினம் காலை 9 மணி அளவில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக நாகராஜன் தம்பி கிருஷ்ணன் என்பவர் சரண்யாவின் தாய் வெங்கட்டம்மாள் என்பவருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு சிகிச்சை பலனின்றி மகள் சரண்யா இறந்து விட்டாார்.எனவே தனது மகள் சரண்யாவின் மரணத்திற்கு காரணமான மருமகன் நாகராஜ் மற்றும் அவரது தந்தை கோவிந்தசாமி அவரது தாய் முனியம்மாள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வெங்கட்டம்மாள் வெள்ளவேடு காவல் நிலையத்தில் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் திருமணமாகி 5 வருடங்களே ஆகியுள்ளதால் வரதட்சணை கொடுமையா என அறிய திருவள்ளூர் ஆர்டிஓ ரமேஷ் விசாரணை மேற்கொண்டுள்ளார்….

The post இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: மருமகன், மாமனார், மாமியார் மீது புகார்; வரதட்சணை கொடுமையா ஆர்டிஓ விசாரணை appeared first on Dinakaran.

Tags : RTO ,Thiruvallur ,Shanmugam ,Srinivasa Street, Pullarambakkam ,Venkattammal ,
× RELATED மதுக்கரை ஆர்.டி.ஓ.செக்போஸ்ட் அருகே...