×

நீட் தேர்வு நிரந்தர ரத்து அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு முறைகேடுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. அதன் காரணமாகவே மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ன. நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் எடுத்தாலும் கூட பணம் இல்லாத மாணவர்களால் தனியார் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் செலுத்தி சேர முடியாது. இது சமூக அநீதி ஆகும். தனியார் நிகர்நிலைப் பல்கலைககளில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும் தான் அதன் நோக்கங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் ஓராண்டில் கூட இந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படவில்லை. மருத்துவக் கல்வி வணிகமயமாக்குவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வு இனியும் தொடரக்கூடாது. எனவே, நீட் தேர்வை ஒன்றிய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.

The post நீட் தேர்வு நிரந்தர ரத்து அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Chennai ,BAMK ,Supreme Court ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக்...