×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 21 நாட்களுக்கு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள் சிறுகுறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுவது அவசியமாகிறது.  இந்த நோய் குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு  மற்றும்  கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் பரவுகிறது. குறிப்பாக, இந்நோய் காற்றின் மூலம் விரைவாக பரவும் தன்மை கொண்டது. இந்த நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில்  உள்ள 1,69,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் முதல் சுற்று  தடுப்பூசிப்பணி இன்று முதல்  21 நாட்களுக்கு நடைபெற உள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றுக்கு கோமாரி நோய் தடுப்பூசி தவறாமல் போட்டுக் கொள்ளவும் என கூறப்பட்டுள்ளது. …

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram district ,Kanchipuram ,Komari ,Komari vaccination ,
× RELATED கோடை வெப்பத்தில் இருந்து வாகன...