×

மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி 4 மணி நேரமாக தொடரும் முற்றுகைப் போராட்டம்

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி 4 மணி நேரமாக முற்றுகைப் போராட்டம் தொடர்கிறது. சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்ட்டர் முன் அமர்ந்து திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் வாகன ஓட்டிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ள 10 கவுண்ட்டர்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர். உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

The post மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி 4 மணி நேரமாக தொடரும் முற்றுகைப் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Keppur toll plaza ,Tirumangalam, Madurai ,Madurai ,Tirumangalam ,Kallupatti ,Beraiyur ,Kepilur ,
× RELATED தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கு போலி...