×

கொலை வழக்கில் கைதான நான்கு பேருக்கு குண்டாஸ்

சிவகங்கை, ஜூலை 10: சிவகங்கை அண்ணா நகரை சேர்ந்தவர் நித்திஷ்குமார்(21). இவரை கடந்த மே மாதம் 19ம் தேதி முன்விரோதம் காரணமாக சிவகங்கை ஆவாரங்காடு பகுதியில், சிவகங்கையை சேர்ந்த சுகுமார் தலைமையிலான ஒரு கும்பல் கொலை செய்தது.

சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகங்கை அருகே புதுப்பட்டியை சேர்ந்த பாலா (எ) பாலமுருகன், கல்லுப்பட்டியை சேர்ந்த குமரேஸ்வரன், சுகுமார். கரும்பாவூரை சேர்ந்த பாண்டிச்செல்வம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஆஷா அஜித்திற்கு சிவகங்கை மாவட்ட எஸ்பி பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post கொலை வழக்கில் கைதான நான்கு பேருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Guntas ,Sivagangai ,Nitish Kumar ,Sivagangai Anna Nagar ,Sukumar ,Sivagangai Awarangadu ,Sivagangai Nagar ,Dinakaran ,
× RELATED மதுவிலக்கு அமலில் உள்ள பீகாாில்...