×

நீலகிரி எஸ்பி மனைவி சென்ற கார் மீது மோதி பைக் எரிந்ததில் 2 பேர் பலி

மேட்டுப்பாளையம்: நீலகிரி எஸ்பியின் மனைவி சென்ற கார் மீது மோதி பைக் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் இறந்தனர். நீலகிரி மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேலின் மனைவி நேற்று முன்தினம் காரில் மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு சென்று கொண்டிருந்தார். காரை முதல்நிலை காவலர் தமிழ் குடிமகன் (32) ஓட்டினார். கார் மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பைக்கும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் வந்த இருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். பைக்கும் தீப்பற்றி எரிந்தது.

படுகாயமடைந்த ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த தனியார் காட்டேஜ் ஊழியர் அல்தாப் (21), அரசுக்கல்லூரி மாணவர் முகமது ஜூனைத் (19) ஆகிய இருவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அல்தாப் இறந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முகமது ஜூனைத்தும் உயிரிழந்தார்.

The post நீலகிரி எஸ்பி மனைவி சென்ற கார் மீது மோதி பைக் எரிந்ததில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Nilgiris SP ,Mettupalayam ,Nilgiri SP ,Nilgiri District ,SP ,Sundaravadivel ,Coimbatore ,
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை...