×

3வது டி 20 போட்டி: இந்தியா-ஜிம்பாப்வே நாளை மோதல்

ஹராரே: இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் முதல் 2 போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இந்த நிலையில் 3வது போட்டி ஜிம்பாப்வே-வில் உள்ள ஹராரே மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை (புதன்) மாலை 4:30 மணிக்கு துவங்க உள்ளது. இதே மைதானத்தில் தான் இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் 2 அணிகளுமே ரன் குவிக்க திணறின. ஜிம்பாப்வே 115 ரன்களும், இந்தியா 102 ரன்களும் மட்டுமே எடுத்தன. ஆனால் 2வது போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி 234 ரன்கள் குவித்தது. எனவே, மூன்றாவது போட்டிக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இரண்டு அணிகளும் தொடரில் முன்னிலைபெற போராடும் என்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post 3வது டி 20 போட்டி: இந்தியா-ஜிம்பாப்வே நாளை மோதல் appeared first on Dinakaran.

Tags : 3rd T20I ,India ,Zimbabwe ,Harare ,T20I ,3rd ,Dinakaran ,
× RELATED வெற்றி தரும் வெற்றி விநாயகர்