×

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ரூ10 கோடியில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் பணியாளருக்கு சீருடை வழங்க நடவடிக்கை: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி  ரூ10 கோடியில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள், பணியாளர்களுக்கு சீருடை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையின் போது, தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் ரூ10 கோடி செலவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு தமிழர் திருநாளாம் தை்திருத்திருநாளில் இரண்டு செட் புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு இரண்டு செட் சீருடைகள் வழங்க வரப்பெறுக்க அறிக்கைகள் சரியான எண்ணிக்கையில் இல்லை என்பதை கடுமையாக சுட்டிகாட்டப்படுகிறது. எனவே, ஆணையர் கடந்த நவம்பர் 25ம் தேதி சீராய்வு கூட்டத்தில் கூறியவாறு, இத்துறையின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து கோயில்களுக்கும் விடுதலின்றி சட்டமன்ற அறிவிப்பு தொடர்பாக அனைத்து கோயில் அலுவலர்கள் தத்தமது எல்லை பிரிவுக்குட்பட்ட அனைத்து கோயில்களுக்கும் விடுதலின்றி அறிக்கை அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது. அந்த அறிக்கையில், கோயில் பெயர், கோயிலில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் எண்ணிக்கை, அர்ச்சகர்கள், பூசாரிகள், குருக்களுக்கு 2 செட் புத்தாடை மற்றும் பணியாளர்களுக்கு 2 செட் சீருடைக்கு ஆகும் மொத்த கொள்முதல் செலவின மதிப்பீடு விவரங்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு கோயில் பூசாரிகள் நலச்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும், அச்சங்க தலைவர் வாசு கூறுகையில், அரசு கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள், அர்ச்சர்கள், பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை மூலம் விலையின்றி சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது’ என்றார்….

The post தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ரூ10 கோடியில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் பணியாளருக்கு சீருடை வழங்க நடவடிக்கை: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Commissioner of Charity ,Tamil Thiruvanala Bongal Festival ,Chennai ,Tamil festival of Bongal ,Commissioner of ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!