- சரவணன்
- சென்னை
- மாரி
- பிரிட்டன்ஸ் ரோடு, கனிகாபுரம், புளியந்தோப்பு
- பாம் சரவணன்
- ஆம்ஸ்ட்ராங்
- ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
சென்னை: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பிரிட்டன்ஸ் சாலையை சேர்ந்த மாரி (48). இவர் பிரபல ரவுடி பாம் சரவணனின் அண்ணன். இவர், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் உடலை பார்க்க சென்றபோது கதறி அழுதுள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாரி நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை பிரபல ரவுடி பாம் சரவணனின் அண்ணன் அதிர்ச்சியில் மரணம் appeared first on Dinakaran.