×

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே இன்று அதிகாலை காய்கறி ஏற்றிச் சென்ற சரக்கு வேன் கவிழ்ந்ததில் டிரைவர், கிளீனர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இருந்து காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றிக்கொண்டு மதுரை காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று சாலை சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. கீரமங்கலத்தை சேர்ந்த டிரைவர் ஜெய்சிங்க ராஜா (45) வேனை ஓட்டினார். கிளீனர் செல்வம் (60) சரக்கு வாகனத்தின் பின்புறம் காய்கறி மூட்டைகளில் படுத்தவாறு பயணித்துள்ளார். இந்த வாகனம் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அடுத்த எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையம் அருகே செம்மணிப்பட்டி விலக்கு பகுதியில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தது.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர், கீளினர் இருவரும் சிறிய காயங்களுடன் தப்பினர். பின்னர், சிகிச்சைக்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேனில் இருந்த காய்கறி மற்றும் பழ மூட்டைகள் மற்றொரு வாகனத்தில் ஏற்றப்பட்டு மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய எஸ்ஐ ஜெயராமன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 

The post திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Tiruptuur ,Pudukkottai district ,Kiramangala ,Madurai Vegetable Market ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு தரமான உரங்கள் கிடைக்க நடவடிக்கை