×

சுகாதாரமற்ற இறைச்சி 10 கிலோ பறிமுதல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய கடைகளில் இருந்து 10 கிலோ ஆட்டிறைச்சியை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். திருவொற்றியூர் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி கடைகள் இயங்குவதாக திருவொற்றியூர் மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருவொற்றியூர் மண்டல சுகாதார நல அலுவலர் கால்நடை மருத்துவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தாங்கல் தெரு, பீர் பயில்வான் தர்கா தெரு போன்ற பல இடங்களில் உள்ள இறைச்சிக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சுமார் 20 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 2 கடைகளில் ஆட்டு இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 10 கிலோ ஆட்டு இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்….

The post சுகாதாரமற்ற இறைச்சி 10 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...