×

வேட்டவலம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

*சாவில் சந்தேகம் என தாயார் புகார்

*எஸ்பி நேரில் விசாரணை

திருவண்ணாமலை : வேட்டவலம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாயார் அளித்த புகாரின்பேரில் எஸ்பி கார்த்திகேயன் நேரில் விசாரணை நடத்தினார்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைய்நல்லூர் அடுத்த ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சண்முகப்பிரியா(30). இவரை வேட்டவலம் அடுத்த ராஜன்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(35) என்பவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

சண்முகப்பிரியாவின் கணவர் ரமேஷ் சென்னையில் உள்ள பேக்கரியில் வேலை வேலை செய்து வருவதாகவும், வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் வீட்டிற்கு வரும் போதெல்லாம் மனைவி சண்முகப்பிரியாவை திட்டியும் அடித்தும் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரமேஷூக்கும் சண்முகப்பிரியாவிற்கும் இடையே தகராறு‌ நடந்ததாம். இதனால் மனவேதனை அடைந்த சண்முகப்பிரியா நேற்று அதிகாலை சண்முகப்பிரியா தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் தீ வைத்து கொளுத்திக் கொண்டாராம்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேட்டவலம் எஸ்ஐ பாபு மற்றும் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து சண்முகப்பிரியாவின் தாயார் மலர்கொடி, தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக வேட்டவலம் போலீசில் கொடுத்த
புகாரின் பேரில் எஸ்ஐ பாபு வழக்கு பதிவு செய்தார். இதனை டிஎஸ்பி ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும், எஸ்பி கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தீக்குளித்து இறந்த சண்முகப்பிரியாவிற்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால், அவரது சாவு குறித்து ஆர்டிஓ மந்தாகினி விசாரணை நடத்த உள்ளார்.

The post வேட்டவலம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vettavalam ,Thiruvannamalai ,SP ,Karthikeyan ,
× RELATED 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல்...