×

தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு

 

ஈரோடு, ஜூலை 8: ஈரோடு திண்டலில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் டிரைவராக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தையை சேர்ந்த ராமன் (27), ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 4ம் தேதி ராமன் கடையில் இருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் மழையில் நனைந்தபடி உள்ளே நுழைந்தனர். இதைப்பார்த்த ராமன், கடைக்குள் வர வேண்டாம், வெளியே ஓரமாக நிற்குமாறு கூறியுள்ளார்.
இதனால், அக்கும்பலை சேர்ந்தவர்களுக்கும், ராமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரம் அடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கீழே கிடந்த கல்லால் ராமன் தலையில் தாக்கியுள்ளனர். மேலும், மது பாட்டிலாலும் ராமன் கன்னத்தில் அடித்தும், கைகளாலும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதைப்பார்த்து கடையில் இருந்த ஆடிட்டர் சந்திரசேகர் விலக்கி விட முயன்றார். அப்போது, அவரையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். காயம் அடைந்த ராமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், ஈரோடு வடக்கு போலீசில் ராமன் அளித்த புகாரின்பேரில், மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

The post தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Raman ,Pallipalayam Ottamethi, Namakkal district ,Dindal, Erode ,
× RELATED ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை விலை உயர்வு