×

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: எஸ்டிபிஐ கட்சி சார்பாக, சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு தலைவர்களின் பெயரில் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி எஸ்டிபிஐ கட்சி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2024ம் ஆண்டு) தமிழ்ச்சுடர் விருதுகளை பெறும் ஆளுமைகளை தேர்ந்தெடுக்க விருது குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சிறந்த ஆளுமைகளை எஸ்டிபிஐ கட்சி தமிழ்ச்சுடர் விருதுக்காக தேர்வு செய்துள்ளது. இதன்படி கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் விருது-தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், பெருந்தலைவர் காமராசர் விருது-விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், டாக்டர் அம்பேத்கர் விருது- திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மாரி செல்வராஜ், தந்தை பெரியார் விருது-சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன்.

கவிக்கோ விருது- எழுத்தாளர், சமூக ஆர்வலர் அ.முத்துக்கிருஷ்ணன், சயீத் சாஹிப் விருது- கோவை மத்திய மாவட்ட எஸ்டிபிஐ தலைவர் முஸ்தபா, பழனிபாபா விருது-தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், ஐயா நம்மாழ்வார் விருது- இயற்கை விவசாய ஆர்வலர் சஜாத் அலி, அன்னை தெரசா விருது- சமூக ஆர்வலர் பரீஹா சுமனுக்கு வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆளுமைகளுக்கு வரும் 13ம் தேதி சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Viswanathan ,SDBI Party ,Chennai ,SDBI ,President ,Nella Mubarak ,Dinakaran ,
× RELATED ஜாமின்தான் முக்கியம், சிறை என்பது...