- கிண்டி
- சென்னை
- மின்சார வாரியம்
- அண்ணா சாலாய்
- அண்ணாநகர்
- பொன்னேரி
- குடிசைகளிலிருந்த
- அண்ணா
- லாபாண்ட் தெரு
- Sindathiripettai
- அண்ணாசலை கோட்டை
சென்னை: மின் வாரியம் வெளியிட்ட அறிக்கை: அண்ணாசாலை, அண்ணாநகர், கிண்டி மற்றும் பொன்னேரி கோட்டங்களில் நாளை 9 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். அண்ணாசாலை கோட்டத்திற்கு சிந்தாதிரிப்பேட்டை, லபாண்ட் தெருவில் உள்ள அண்ணா சாலை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், அண்ணாநகர் கோட்டத்திற்கு அண்ணாநகர், 11வது பிரதான சாலை, 5- வது தெரு, எச் – பிளாக்கில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும்,
கிண்டி கோட்டத்திற்கு நங்கநல்லூர், இந்து காலனி, 100 அடி சாலையில் உள்ள 33/11 கி.வோ. நங்கநல்லூர் துணை மின்நிலைய செயற்பொறியாளர் அலுவலகத்திலும், பொன்னேரி கோட்டத்திற்கு வேண்பாக்கம், டி.எச். ரோட்டில், 33 /11 கி.வோ. துணை மின் நிலையத்தில் உள்ள பொன்னேரி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெறும். பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என அண்ணாசாலை, அண்ணாநகர், கிண்டி மற்றும் பொன்னேரி கோட்டங்களின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
The post கிண்டி உள்பட 4 கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.