×

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான காளை உருவம் கண்டெடுப்பு

ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வு பணி கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த அகழாய்வில் உடைந்த நிலையில் சுடுமண்ணாலான காளை பொம்மையின் உடல் பாகம், கருப்பு நிற சுடுமண் காதணி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் மணி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

ஏற்கனவே நடந்த 2ம் கட்ட அகழாய்வு பணியின் போது, 10க்கும் மேற்பட்ட காளை உருவம் கண்டெடுக்கப்பட்டது. தற்போது மேலும் ஒரு காளை உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இங்கு வசித்த மக்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளது உறுதி செய்யப்படுவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

The post வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான காளை உருவம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Vembakotta ,Ejayarampannai ,Vijayakarisalkulam ,Vembakottai ,Virudhunagar district ,
× RELATED வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு