- கேரளா
- சின்னேசலம்
- கருணாபுரம்
- கலாலகுரிச்சி கருணாபுரம்
- சுயாதீன காவல
- சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை
- மாவட்ட எஸ்.பி.
- ரஜத் சதுர்வேதி
- கலாலகுரிச்சி
சின்னசேலம்: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த மாதம் 18ம் தேதி மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி ரஜத் சதுர்வேதி தலைமையில் தனிப்படை போலீசார், சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை போலீசார், ஆயுதப்படை போலீசார் ஆகியோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சின்னசேலம், கச்சிராயபாளையம், கீழ்குப்பம், கல்வராயன்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி இதுவரை 100க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.
இதனால் கச்சிராயபாளையம், கல்வராயன்மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் கேரளா, பெங்களூரு என கடந்த ஒருவாரத்திற்கு முன் தப்பி ஓடிவிட்டனர். அவ்வாறு தப்பி ஓடியவர்களை கணக்கெடுத்து போலீசார் அங்கு சென்று கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த கச்சிராயபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மண்மலை கிராமத்தை சேர்ந்த கள்ளச்சாராயம் வியாபாரி ஆறுமுகம் (40) என்பவரை கூலி தொழிலாளி போல் மாறுவேடத்தில் சென்று போலீசார் கைது செய்தனர். இவர் மீது 10க்கும் மேற்பட்ட சாராய வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கேரளாவில் பதுங்கிய கள்ளச்சாராய வியாபாரி கைது appeared first on Dinakaran.