×

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர், ஜூலை 5: தேசிய தேர்வு முகமையை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், இடதுசாரி மாணவர் அமைப்புகள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர் . அதன் அடிப்படையில் திருப்பூர் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் விமல்ராஜ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய தேர்வு முகமையில் நடைபெறும் குளறுபடிகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில், மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், மாவட்ட தலைவர் கல்கி ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் சுஜிதா, மாவட்ட குழு உறுப்பினர் நிஷா, கிளை செயலாளர் கண்ணன் உட்பட 80க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : NEET ,Tiruppur ,National Election Agency ,Tiruppur Chikanna College of Arts and Sciences ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் காற்று அதிகமாக...