×

பிரபாஸ் நடிக்கும் சலார் 2 பாகங்களாக உருவாகிறது: கன்னட நடிகர் தகவல்

 

பெங்களூரு: யஷ் நடிப்பில் வெளியான ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய பான் இந்தியா படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உள்பட பலர் நடிக்கும் ‘சலார்’ என்ற பான் இந்தியா படத்தை இயக்குகிறார். தற்போது முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகமும் விரைவில் உருவாக்கப்படும் என்ற புதிய தகவலை கன்னட நடிகர் தெரிவித்துள்ளார். இதுவரை வதந்திகளாக மட்டுமே உலா வந்த இச்செய்தியை, கன்னட நடிகர் தேவராஜ் தற்போது உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பிரபாஸுடன் ‘சலார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது பற்றி சொன்னார். மேலும் அவர் கூறுகையில், ‘இப்படத்தின் முதல் பாகத்தை விட 2ம் பாகத்தில் எனக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் செப்டம்பர் 28ம் தேதி ‘சலார்’ படத்தின் முதல் பாகம் திரைக்கு வருகிறது. யஷ் நடிக்கும் ‘கேஜிஎஃப்’ படத்தின் 3ம் பாகத்தை இயக்கி முடித்த பின்பு, பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் 2ம் பாகத்தை இயக்க பிரசாந்த் நீல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

The post பிரபாஸ் நடிக்கும் சலார் 2 பாகங்களாக உருவாகிறது: கன்னட நடிகர் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prabhas ,Salaar ,Bengaluru ,Prashant Neil ,Yash ,Shruti Haasan ,Prithviraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...