×

3 வாகன ஓட்டுநர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள், அறிவிப்புகள், ஆணைகள், செய்தி வெளியீடுகள், அறிக்கைகள், வேண்டுகோள் முதலிய அனைத்தையும் மக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சென்று சேர்த்திடும் அரும்பணியை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

இந்த துறையில் காலியாக இருந்த வாகன ஓட்டுநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3 பேருக்கு வாகன ஓட்டுநர்களுக்கான பணி நியமன ஆணைகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை செயலகத்தில் நேற்று வழங்கி வாழ்த்துகள் கூறினார். இந்நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உடனிருந்தனர்.

The post 3 வாகன ஓட்டுநர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,MU Saminathan ,Chennai ,Public Relations Department ,Tamil Nadu Government ,Chief Minister ,M.K.Stalin ,MU ,Saminathan ,
× RELATED செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப...