- தி.மு.க. எம்.எல்.ஏக்கள்
- ராமதாஸ்
- அன்புமணி
- சென்னை
- தி.மு.க. எம்.எல்.ஏக்கள்
- உதயசுரியன்
- வசந்தம் கார்த்திகேயன்
- கள்ளக்குறிச்சி
- பிஎம்சி
- ஜனாதிபதி
- ராமதாஸ்
- தின மலர்
சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம் தொடர்பாக, பாம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர், தங்களுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்துள்ளதாகக் கூறி, திமுக எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்த நோட்டீசுக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் பதில் அனுப்பியுள்ளனர்.
அதில், விஷ சாராய மரண சம்பவத்துக்குப் பின் முதல்வர் எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கு பதிலளிக்க அவசியமில்லை. எந்த காழ்ப்புணர்ச்சியுடனும் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. சமூகப் பிரச்னைகளை பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கில் கருத்து தெரிவிக்கப்பட்டது, தமிழக மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக குரல் எழுப்பி வரும் தங்களுக்கு எதிராக அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
The post திமுக எம்எல்ஏக்கள் நோட்டீஸ் சமூக பிரச்னைக்காகவே கருத்து தெரிவித்தோம்: ராமதாஸ், அன்புமணி பதில் appeared first on Dinakaran.