×

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

விருதுநகர்: சாத்தூரில் 4 பேர் உயிரிழப்புக்கு காரணமான பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சகாதேவனின் மகன் குருசாமி கைது செய்யப்பட்டார்.

The post பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது appeared first on Dinakaran.

Tags : plant ,Virudhunagar ,Chathur ,District Revenue Officer ,Rajendran ,Sakadevan ,Bandhuarpatti ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை...