×

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்

திருமலை: திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் நேற்று ஏராளமான வாகனங்கள் வந்தது. அப்போது சாலையையொட்டி 7 யானைகள் சாலையோரம் சென்றது. யானைகள் கூட்டம் சாலையை நெருங்கி அங்குள்ள மரங்களை முறித்து பிளிறியது. இதனை கண்டு பக்தர்கள் பீதியடைந்தனர். இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ? என்ற அச்சத்தில் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். தொடர்ந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

தகவலறிந்த தேவஸ்தான வனத்துறை மற்றும் விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானைகள் கூட்டத்தை மேளம் அடித்து, சத்தம் போட்டு விரட்டினர். பின்னர் மீண்டும் யானைகள் கூட்டம் இரவு 9 மணிக்கு வந்தது. அவற்றையும் விரட்டி அடித்தனர். இதனால் பக்தர்கள் பீதியடைந்துள்ளனர்.

The post திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Dinakaran ,
× RELATED திருப்பதியில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் முன்பதிவு முடிந்தது