×

சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்விடத்தில் வருவாய், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தின் போது பணியில் எத்தனை தொழிலாளர்கள் இருந்தார்கள், வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chatur ,Virudhunagar ,Bandhuwarpatti ,Virudhunagar district ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...